Sunday 1 April 2012

இன்றைய குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்கள் என்னென்ன?’

உலகின் விலைமதிப்பில்லாத ஆதாரம், மிகச்சிறந்த நம்பிக்கை, எதிர்காலம்… குழந்தைகள்தா ன்! இன்றைய குழந்தைகள்… முன் எப்போதும் இல்லாத அள வுக்கு வாய்ப்புகளைப் பெற்றுள் ளார்கள், அதிநவீன வசதிகளை அனுபவிக்கிறார்கள். ஆனால், அவர்கள் குழந்தைகளாக, குழந் தைக்கே உரிய சந்தோஷங்க ளோடு இருக்கி றார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது, அவ ர்களுக்கு முன்னால் நிற்கும் சவால்கள்.
 
இன்றைய குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்கள் என்னென்ன?’ என்ற கேள்வியை, குழந்தைகளுடன் இணைந்து பணியாற்றும் குழந்தை  இலக்கியப் படைப்பாளி நடராசன் மற்றும் மனநல ஆலோசகர் முனைவர் லாவண்யா ஆகியோரிடம் முன் வைத்து பேசினோம். இருவரும் வரிசைப்படுத்திய எட்டு சவால் கள், இங்கே… பெற்றோர்களின் கவனத்துக் காக இடம் பிடிக்கின் றன.
1. தனிமை: ’நோபல்’ பரிசுபெற்ற பொருளா தார நிபுணர் அமர்த்தியா சென், ‘ஒரு காலத் தில் நியாயத்தைக் கருதி உருவாக்கி வைக்க ப்பட்ட உறவுகள், இன்று லாபம் கருதும் உற வுகளாக சுருங்கிவிட்டன’ என்று வேதனை யுடன் சொல்லியுள்ளார். இன்றைய குழந்தை , தான் யாருடன் விளையாடுவது என்று தீர் மானிப்பதில்கூட லாபம், சுயநலம் சார்ந்து முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. ‘இன்னாருடன் சேர்ந்து விளையா டினால்தான் என் குழந்தை நல்லவனாக வள ருவன்’ என்ற கற்பிதத்தில் ஒவ்வொரு குழந் தையின் நட்பு வட்டமும் பெற்றோர்களால் கண்காணிக்கப்படு கிறது, சுருக்கப்படுகிறது.
பல வீடுகளில் சி.டி-க்களும் கார்ட்டூன்களுமே குழந்தைகளின் தோழமை ஆகின்றன. இப்படித் தனிமையில் வளரும் குழந்தைக ள், எப்படி சோஷியலைஸ்டாக வளர முடியும்? எனவே, நண்பர் கள், உறவினர்கள் என சமூகத்தி டம் பழகவிட்டு வளர்த்தெடுங்கள் குழந்தைகளை.
2. மலையேறிப்போன விளையா ட்டுப் பொழுதுகள்: குழந்தைகள் குழுவாக சேர்ந்து விளையாடிய காரணத்தால்… சாதிய உணர்வுக ள் மழுங்கடிக்கப்பட்ட அற்புதங்கள் எல்லாம் நிகழ்ந்துள்ளன. ஆனால், இன்று ஓர் குழந்தை குழுவாக விளையாடுவதற்கு வாய்ப் புகள் இல்லை என்பதைவிட, அந்தக் குழந்தை விளையாடுவதற் கே அனுமதிக்கப்படுவதில்லை. ‘விளையாடுற நேரம் அந்த கணக் கை ப் போட்டுப் பாரு’ என்பது போன்ற பெற்றோர்களின் சுயநலம் சார்ந்த தவறான புரிதலால், குழந்தைகளால் தங்கள் இயல்புக்குரிய விளையாட்டை அனுபவிக்க முடிவதில்லை.
பாரதி சொன்ன ‘ஓடி விளையாடு பாப்பா’வை தான் மருத்துவர் களும் சொல்கிறார்கள். உடல், மன ஆரோக்கிய த்துடன் உங்கள் குழந்தை வளர, அடுத்த முறை… ‘விளையாடச் செல்கிறேன்’ என் று கேட்டால், மகிழ்ச்சியுடன் அனுப்பி வையுங்கள்.
3. முதலீடாகும் குழந்தைகள்: ’உனக்கு நான் எல்.கே.ஜி-க்கு பத்தாயிரம் செலவு செய்தேன், ஐந்தாம் வகுப்புக்கு 20 ஆயி ரம் செலவு செய்தேன், எட்டாம் வகுப்புக் கு 30 ஆயிரம் செலவழித்துக் கொண்டிரு க்கிறேன்’ என்றே பெரும்பாலான பெற் றோரும், குழந்தைக்காக செய்யும் கட மை என்பதை உருமாற்றி… குழந்தை மேல் செய்திருக்கும் முதலீடு என்கிற எண்ணத்தை குழந்தையின் மனதில் விதைக்கிறார்கள்; அந்தக் குழந்தைக்கு… முதலீட்டுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்க வேண்டிய இறுக்கமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறார் கள். இந்த இன்வெஸ்ட்மென்டை மதிப்புமிக்க பொருளாக மாற்று வது போல் தான் கொடுக்கப்படுகின்றன ‘எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்ட் டிவி ட்டீஸ்’ என்கிற நட னம், இசை, ஆங்கிலம், ஃபிரெஞ்சு கிளாஸ் போன்றவை. அன்பை முதலீடு செய்யுங்கள் குழந்தை மேல்… பதில் அன்பு கிடை க்கும்!
4. பெரிய மனுஷத்தனம்: குழந் தையின் திறமை, அறிவு ஆகி யவற்றை, அது வாங்கும் மார் க்கை வைத்தே மதிப்பிடுகிறார்கள் வீடு மற்றும் பள்ளியில். அதா வது குழந்தையின் பெர்ஃபார்மென்ஸை வைத்தே அவர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. அதனால் ஒவ்வொரு குழந்தை யும் நாம்தான் ‘நம்பர் ஒன்’னாக இருக்க வேண்டும் என்ற ஓட்டப் பந்தயத்தில் ஓட ஆரம்பிக்கும் போது, அதன் வயதுக்கும் இயல்புக் கும் மீறிய அறிவைத்தேடி அலை கின்றன. அதனால்தான் ஒன்றாம் வகுப்புப் படிக்கும் குழந்தை மூன் றாம் வகுப்புப் படிக்கும் குழந்தை போல் பெரிய மனுஷத் தனமாகப் பேசுகிறது. இந்த பெரிய மனுஷத் தனம் சில சமயங்களில் வன் முறையாக உருவெடுக்கிறது. ‘எம் பொண்ணு பெரிய மனுஷி மாதிரி பேசுவா..!’ என்று பெருமைப்படும் பெற்றோர், ஒரு கணம் நிறுத்தி சிந்தியுங்கள்.
5. வடிகட்டப்படாத செய்திகள்: வரவேற்பறையில் டி.வி, படுக்கை அறையில் கம்ப்யூட்டர், மொபைல் போனில் செய்தி எனத் தகவல் தொடர்பு சாதனங்கள் நொடிக்கு நொடி பல்லாயிரம் செய்திகளை கொட்டிக் கொண்டே இருக்கின்றன. பெரியவர்களுக்காக பிரத்யேக மாக உருவாக்கப்பட்ட இந்தத் தகவல் தொடர்பு சங்கிலியில், பாஸி ட்டிவ் செய்திகளைவிட நெ கட்டிவ் விஷயங்களே அதிக ம் கிடைக்கின்றன. ஒரு குழந் தை விரும்பினாலும் விரும் பாவிட்டாலும் இந்தத் தகவ ல்கள் அனைத்தும் அந்தக் குழந்தையையும் சென்று சேர்கின்றன. சீரியலில் வரும் இரண்டாம் தாரம் பற் றிய கதை, ஒரு மூன்றாம் வகுப்புச் சிறுமிக்கு எதற்குத் தேவை என்பது பற்றி யோசிப்பதில் லை. அதனால் ஒரு குழந்தை தன் வயதுக்கும், மன துக்கும் தேவை இல்லாத விஷயங்களைக் கற்றுக் கொள்வதால் அந்தக் குழந்தை யின் அன்பான, பண்பான இயல்புகள் நமக்குத் தெரியாமலேயே சிதைக்கப்படுகின்றன. மீடியாக்களுக்கு தணிக்கை கொண்டு வருவ தைப் பற்றி அரசாங்கம் சிந்திக்கும் என்று காத்திருக்காமல், முடிந் தவரை முடக்கிப் போடுங்கள் தொலைக் காட்சிகளை.
6. ஒப்பீடு: ’நீ மட்டும் இந்த வருஷம் ஒழுங்கா பரீட்சை எழுதி, ஃபர்ஸ்ட் குரூப் வாங்கலேனா… உன் லைஃபே அவ்வளவுதான்’ என்பது போன்ற உணர்வுப் பூர்வமான தாக்குதலை எதிர் கொள்ளாத குழந்தைகளே இன் று இல்லை. ‘பக்கத்து வீட்டு சுரேஷ் மேத்ஸ்ல சென்டம் வாங்கியிருக்கான். நீ இன்னும் 80 மார்க்லயே நில்லு’, ‘சுனிதா என்ன அழகா டான்ஸ் ஆடுறா… நீயும்தான் இருக்கியே’ என்பது போன்ற ஒப்பீட்டுத் தாக்குதலுக்கு ஆளாகாத குழந்தைகள் யார் இருக்கிறார்கள்? வீட்டுக்கு வீடு நடக்கும் இந்தத் தாக்குதல் மனதள வில் ஓர் குழந்தையை நிறையவே காயப்படுத்துகிறது. ‘நாம் எதற் குமே லாயக்கு இல்லையோ’ என்ற தாழ்வு மனப்பான் மையையும், ‘அவனால்தான இந்தத் திட்டு’ என்கிற பொறாமை மனப்பான்மை யையும் வளர்க்கிறது. இது நாளடைவில் வன்முறைக்கு வழி செய்யும். ஒப்பீட்டுத் தாக்குதல் குழந்தைக ளை எந்தளவுக்கு பாதை மாற்றுகிறது என்பதை உணருங்க ள்.
7. மாறிவரும் கலாசாரம் – உணவு: தொழில்நுட்ப வளர்ச்சியாலும் உலகமயமாக்கத்தாலும் பூமி பந்து சிறு உருண்டையாகிவிட்டது. நூடுல்ஸ், உலகக் குழந்தைகளின் உணவாகிவிட்டது. சர்வதேச பிராண்ட் நொறுக்குத் தீனிகள், ஹோட்டல்ஸ், கூல்டிரிங்ஸ் என உணவுப் பழக்கத்தில் பெரும் மாற் றம் வந்துவிட்டது. நம் சீதோஷ ண நிலைக்குப் பொருத்தம் இல் லாத உணவு, அதிக கலோரி கொ ண்ட உணவு, அந்த அதிக கலோரி யை வெளியேற்ற வழி இல்லாத வாழ்க்கை முறை என பல்வேறு காரணங்களால் சிறு குழந்தைக் கும் சர்க்கரை நோய், ஒபிஸிட்டி, ரத்த அழுத்தம் என படுத்துகிறது. அதே நேரம், ‘சத்துக் குறைபாடு தேச அவமானம்’ என பிரதமரே சொல்லும் நிலை.குழந்தைகளின் உணவையும் ஆரோக்கியத் தையும் பொருத்தத் தெரிந்தவர்களே… சிறந்த பெற் றோர்.
8. பாதுகாப்பு: சமீபகாலமாக குழந்தைகள் காணாமல் போவது அதிகரித்து வருகிறது. பள்ளிக்கும் வீட்டுக் கும் இருக்கும் தூரம், பெற்றோர்கள் இருவரும் வே லைக்குப் போகும் சூழ்நிலையில் தனித்து இருக்கும் குழந்தைகள் என பல்வேறு காரணங்களால் குழந்தை யின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. அதே போல் தனித்து இருக்கும் குழந்தைகளிடம் நடக்கும் பாலியல் அத்துமீறல்களும், சீண்டல்களும் அச்சுறுத் துபவையாக இருக்கின்றன. இதனை நிகழ்த்துபவர்க ள் பெரும்பாலும் அந்தக் குடும்பத்துக்கு நெருங்கிய உறுப்பினர்களாக இருப்பதால், அது சரியா… தவறா என்ற குழப்ப மனநிலைமையில் இருப்பது குழந்தைகளின் பெரும் பெரும் சவலாக இருக்கிறது.
வளரும் சூழ்நிலையும், மீடியாவின் வளர்ச்சியும் குழந்தைகளுக் குப் பாலுறவு குறித்து பல தவறான புரிதல்களை கற்பித்து உள்ளன. இதனால், பள்ளிக் குழந்தைகளி டம் கூட கர்ப்பக் கலைப்பு நடந் துள்ளது என்கிற அதிர்ச்சிகர மன தகவல்கள் வெளியாகி உள் ளன. ‘குட் டச்… பேட் டச்’ என ஐந்து வயதில் இருந்தே கற்றுக் கொடுங்கள் தற்காப்பு விஷயங் களை.
”ஒரு கலாசார – பொருளாதார – சமூக மாற்றத்தில் பாஸிட்டிவ் ஆன விஷயங்களும், நெகட்டிவான விஷயங்களும் இருப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால், அந்த பாஸிட்டிவ் – நெகட்டிவ் விஷய ங்களில் எது தேவை, தேவையில்லை என்பதில் முதலில் பெற் றோர்கள் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தா ல் மட்டுமே குழந்தைகள் குழந்தைகளாக வளர முடியும். அதற்கு, குழந் தை களுடன் உரையாட வேண் டும்!” என்கிறார் நடராசன் நெத்தியடியா க!
ஆம்… குழந்தைகளுடனான பெற்றோர்களின் குவாலிட்டி நேரங்க ளே இச் சவால்களை எதிர்கொள்ளும் பக்குவத்தை, வழி காட்டலை அவர்களுக்கு வழ ங்கும்!

No comments:

Post a Comment